கபில சந்திரசேனவின் மரண விசாரணை! சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த வீட்டில் உள்ள சிசிடிவி கமரா அமைப்பிலிருந்து எந்த தரவுப்பதிவுகளும் கிடைக்கவில்லை என்று கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து ( 08) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கபில சந்திரசேனவின் விவகாரம்! அறையில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி அட்டை - பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்
சந்திரசேனவுக்கு சொந்தமான வீட்டில் சோதனை
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டின் ஓர் அறையில் கபில சந்திரசேன கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் உள்ள சிசிடிவி கமரா அமைப்பிலிருந்து எந்த தரவுப்பதிவுகளும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த விசாரணை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கிய போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சந்திரசேனவுக்கு சொந்தமானது என்று நம்பப்படும் ஒரு வீட்டினை ஆய்வு செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அந்த வீடு அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட இரண்டு மடிக்கணினிகள் மற்றும் பல ஆவணங்கள் வழக்கு ஆதாரங்களாக கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
பல வீடுகளின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு
மேலும், மரணம் நிகழ்ந்த இடத்தில் காகிதத்தில் சுற்றப்பட்டு கண்டெடுக்கப்பட்ட, அடையாளம் இடப்படாத இரண்டு வகையான மருந்துகள் பரிசோதனைக்காக அரசாங்கப்பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த விசாரணையின் போது, கபில் சந்திரசேன சடலமாக மீட்கப்பட்ட இல்லத்திலிருந்து அனைத்து சிசிடிவி காட்சிகளும் புலனாய்வாளர்களால் பெறப்பட்ட நிலையில், வீட்டில் சிசிடிவி அமைப்பு இயங்கிக்கொண்டிருந்தாலும், எந்த தரவும் பதிவாகவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், அருகிலுள்ள பல வீடுகளின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்திரசேன பிணையினை பெற்று மே 6 ஆம் திகதி தனது இல்லத்திற்கு வந்ததிலிருந்து, மே 7 ஆம் திகதி அரவிந்த டி சில்வாவின் இல்லத்திற்கு புறப்படும் வரை, அவரை சந்திக்க வெளியாட்கள் யாரும் வரவில்லை என்றும் சந்திரசேனவின் இல்லத்தில் பணிபுரியும் வீட்டுப்பணியாளர் சாட்சியமளித்துள்ளார்.
இலங்கையில் மோசமடையும் காலநிலை! கைபேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan