ஷானி அபேசேகரவின் நியமன விடயத்தில் கர்தினாலின் தலையீடு இல்லை! வெளியான அறிவிப்பு
ஷானி அபேசேகரவை குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநராகவோ அல்லது ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவோ நியமிக்குமாறு, கர்தினால் ஒருபோதும் கோரவில்லை என்று கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.
தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த இன்று இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாள்பவர்களை மாற்றவும், அவர்களை மீண்டும் அவர்களின் அசல் பதவிகளில் அமர்த்தவும் மட்டுமே கர்தினால் ரஞ்சித் விரும்பினார் என்று அருட்தந்தை ஜூட் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஷானி அபேசேகர போன்ற அதிகாரிகள் மீது சில குற்றச்சாட்டுகள் இருப்பதை திருச்சபை புரிந்துகொள்வதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.




