இந்த ஆண்டு இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப் பெறாது என தகவல்
2022ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கைக்கு கிடைக்கப் பெறாது என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கு அதிகாரபூர்வமான அனுமதியை சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்காது என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் விசேட கூட்டம்
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு கடன் வழங்குகை தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் விசேட கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri