பாழடைந்து காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க நிலாவரை கிணறு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் நிலாவரை கிணறு மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் குழு தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழர் பகுதிகளில் உள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிக்காமல் பாழடைய விட்டுவிட்டு புதிய கட்டடங்களைக் கட்டுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிலாவரை கிணறு மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதைப் பார்க்கின்ற போது மிகவும் கவலையாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலாவரை கிணறை ஏன் உரிய அமைப்பினர் மற்றும் அரசாங்கம் கவனிக்காமல் உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், குறித்த பகுதியை சுத்தம் செய்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam