நைஜீரிய பிரஜைக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
நைஜீரிய பிரஜை ஒருவருக்கு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான போதைப்பொருளான கொக்கைன் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (06.07.2023) தீர்ப்பளித்துள்ளது.
மரண தண்டனை விதிகள்
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சி போ உச்சயனா என்ற 40 வயது நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27 மே 2016 அன்று ராஜகிரியில் உள்ள உணவகத்தின் முன்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் நடவடிக்கையில் 1 மற்றும் 700 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த முறைப்பாடு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையினால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் மரண தண்டனை விதிகளை ஆராய்ந்து, சந்தேகநபருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
