சித்திரை புத்தாண்டு பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய நபர் கைது
சித்திரை புத்தாண்டு குறித்து சிங்கள மொழியில் பாடப்பட்ட பிரபல பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல பாடகர் ரோஹன பெத்தகேவின் “சூர்ய மங்கல்ய” என்ற பாடலே இவ்வாறு திரிபுபடுத்தி பாடப்பட்டுள்ளது.
திரிபுபடுத்தப்பட்ட பாடல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
முறைப்பாடு
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணனி குற்றப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் வாரியபொல தலாதுஓய பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் இன்று குளியாப்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
