இளம் பெண்களை மிரட்டி பெருந்தொகை பணம் பெற்ற நபருக்கு நேர்ந்த கதி
இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கண்டி பிலிமதலாவ பகுதியைச் சேர்ந்தவராகும். அவிசாவளை பகுதியில் மறைந்திருந்த வேளையில் அவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரியாக தன்னை வெளிப்படுத்திய நபரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பணமோசடி
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பணமோசடி தொடர்பான 5 பிடியாணைகளும், போதைப்பொருள் தொடர்பான இரண்டு பிடியாணைகளும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் தம்வசம் உள்ளதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.
அதனை தவிர்ப்பதாக பணம் வழங்குமாறும் கோரியுள்ளார். இதற்கு பயந்த சில பெண்கள் பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 16 மணி நேரம் முன்

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
