வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பவுள்ளோர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு
கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 52,710 கோவிட் நோய்களில் 1,593 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 3,480 புதிய பாதிப்புகளில் 538 மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,