புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு யார் பொறுப்பு? செய்திகளின் தொகுப்பு
புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாடொக்சின் கலந்த தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான பொறுப்பை சுங்க, சுகாதார அமைச்சகம் மற்றும் இலங்கை தரநிலைகள் நிறுவனம் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் ஏற்க வேண்டும் என்று கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பல நிறுவனங்களில் குறிப்பாக இலங்கை சுங்கத்தில் குறைபாடுகள் உள்ளன.
இந்த செயல்முறை இன்று அல்லது கடந்த வாரம் நடந்த ஒன்று அல்ல. இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக நடந்து வரும் இந்த செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளன.
எனவே இந்த விடயத்தில், சுங்க மற்றும் தரநிலை நிறுவனம் உட்பட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்