விமல், கம்மன்பில, வீரசேகர ஓரணியில்! செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்குச் சாபக்கேடான 13 ஆவது திருத்தச் சட்டத்தை 22 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியாவில் குரல்கள் வலுத்துவரும் நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு இலங்கையை அடக்கி ஆள இந்தியா முனைகின்றது. அதேவேளை, வடக்கு – கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக தனிநாடு கோருகின்றார்கள்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்னமும் பகிரப்படவில்லை என்று கூறி அதியுச்ச அதிகாரப் பகிர்வை அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,