மாணிக்கக்கல் கொத்தணி பற்றிய செய்தி பொய்யானது – ஐ.தே.க
மாணிக்கக்கல் கொத்தணி பற்றிய செய்தி பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் இரத்தினபுரியில் மாணிக்கக்கல் கொத்தணிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் மக்களை திசை திருப்பும் நோக்கிலானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பிரச்சினைகளை மூடி மறைக்கவே இந்த மாணிக்கக்கல் கொத்தணி பற்றி செய்தி வெளியிடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலி எல்ல பகுதியில் இன்று கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னதாக தம்மிக்க பாணி என்றதொரு செய்தி வெளியிடப்பட்டு மக்கள் திசை திருப்பப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி முதல் இதுவரையில் கொவிட் காரணமாக 1600 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கொவிட் நிலைமைகள் மோசமடைந்துள்தளாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர அவசரமாக இரசாயன உரத்தை தடை செய்ததன் மூலம் அடுத்த ஆண்டு மக்கள் பட்டினியை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொற்று நிலைமைகளில் அரசாங்கத்தினால் இணைய வழி கல்வியை வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு டெப்களை வழங்கும் திட்டம் நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கபட்டதாகவும் அதனை அப்போதைய ஜனாதிபதி மைத்திரி தடுத்து நிறுத்தியதாகவும் ருவான் விஜேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan