அச்சுவேலி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதைக்கான வளைவு
அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதைக்கான வளைவு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவனால் இன்று (05.11.2025) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் நீண்ட காலமாக பாதையின் வளைவு இல்லாத காரணத்தினால் அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் பழைய மாணவர்களால் குறித்த வளைவு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு
குறித்த வளைவினை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்,
“நாட்டில் தற்போது ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமானது பலருக்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளது. போதையின் பிடியிலிருந்து நாட்டிலுள்ள இளைஞர்களை மீட்க வேண்டும்.

எவ்வாறாயினும் அனைத்து சவால்களையும் கடந்து நாட்டினை வளமுள்ள சிறந்த பிரஜைகள் உள்ள நாடாக மாற்ற முன்வரவேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணந்து செயற்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam