நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனிமைப்படுத்தப்பட்டார்!
நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர் நாயகம் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள், கெரிகேரியில் இருந்து ஒக்லாந்திற்கு பயணித்த விமானத்தின் பணிப்பெண் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, அந்த விமானம் "அதிக ஆபத்தானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையின்படி பிரதமர் நாளைய தினம் உடனடியாக பரிசோதிக்கப்படுவார் மற்றும் செவ்வாய் வரை தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri