இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கோவிட் வைரஸின் புதிய திரிபு
இந்தியாவின் கேரள மாநிலத்தில் புதிய வகையான கோவிட் வைரஸ் திரிபு பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வைரஸ் தொற்று சிங்கப்பூரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய ஊடக செய்தி
மேலும், கேரள மாநிலத்தில் குறித்த கோவிட் வைரஸ் திரிபு தொற்றுறுதியான 230 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்திகளில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அங்கு தொற்றுறுதி செய்யப்பட்ட 1,104 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |