கொழும்பில் இன்று நடைமுறைக்கு வரும் புதிய போக்குவரத்து நெறிமுறை
கொழும்பில் இன்று சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அத்துலதஸ்ஸனாராம விகாரையின் வருடாந்த பெரஹர காரணமாக சில வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவுள்ளது.
விகாரையின் வருடாந்திர பெரஹர இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரஹர பௌத்தாலோக மாவத்தை, கனத்த சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி பொரளை சந்தி, மருதானை வீதி பேஸ்லைன் குறுக்கு வீதி, லெஸ்லி ரணகல சந்தி ஆகிய இடங்களில் திரும்பி, அதே பாதையில் ஆலயத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மாற்றுப்பாதையை பயன்படுத்தும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அசௌகரியத்தை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri