அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்: அறிமுகமாகும் புதிய வரிகள்
வரிகளை வசூலிப்பதற்காக அடுத்த ஆண்டு (2025) சொத்து வரி, பரிசு மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
மேலும், வருவாய் நிர்வாக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் வருவாயை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விளக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சொத்துக்கள் கொண்ட வரி
இந்த அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 15 சதவீதத்தை கடந்து வருவாய் இலக்குகளை அடைவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனிநபர் வருமான வரிக்கு தனிநபர்களின் பதிவு கட்டாயமாக்குதல், அதிக சொத்துக்கள் கொண்ட வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்துவோர் அலகுகளை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வருவாய் நிர்வாகம் மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பை (RAMIS) மேம்படுத்துதல் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி முறையை ஒழித்தல் என்பன நிறுவனங்களின் வருவாய் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பணத்திற்காக என்னை பயன்படுத்தினார் - குகையில் வாழ்ந்த ரஷ்யா பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
