சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய முறை: வெளியான அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான புதிய முறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் மோட்டார் போக்குவரத்துத் துறை உதவி ஆணையர், தலைமை மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் மருத்துவர் ஆகியோர் அடங்குவர்.
சோதனை நடத்தப்படும்
மேலும், சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி நபர், அவர் விண்ணப்பித்த வாகனத்தைச் செலுத்துவதற்குச் சரியான உடல் தகுதி உள்ளவரா என்பதை இந்தக் குழு முதற்கட்ட பரிசோதனையை மேற்கொள்ளும்.
ஊனத்தின் அடிப்படையிலேயே சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
அத்துடன், வாகனத்தின் உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவதற்கு தற்போதுள்ள ஊனம் தடையாக உள்ளதா என்பது குறித்து நடைமுறைச் சோதனை நடத்தப்படும்.
பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வாய்ப்பு
அவ்வாறான தடையில்லை என நிபுணர் குழு சிபாரிசு செய்தால், குறித்த நபர் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் சாதாரண முறையின் கீழ், எழுத்து மற்றும் நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் துறை புதிய சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
