ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (Photos)

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Ashik Apr 11, 2023 07:48 PM GMT
Report

நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மன்னார் சிலாவத்துறை கொண்டச்சி சிங்கள விஜய கம்மான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின்னர் இன்று (11.04.23)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்ததாவது, 

‘‘நீதி அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு திட்டத்தினால் கொண்டச்சி, காயக்குழி, மறிச்சுக்கட்டி மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகளில் வசிக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் பயனடைவார்கள்.

ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (Photos) | New Sri Lanka Prevention Of Terrorism Act

குடிநீர் வசதி

மக்களுக்கு குடிநீர் வசதி உள்ளது. சிலாவத்துறை, வில்பத்து, விஜயதிலக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண பிரதம நீதியரசர் சங்கநாயக்க, மகாவிளச்சி அதி வணக்கத்துக்குரிய விமலநாயக்க தேரர், நீதியமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, இதற்காக ரூ.34 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின்படி, இங்குள்ள நீர் சுத்திகரிப்புக்கு, பிறகு குடிப்பதற்கு ஏற்றது என பரிந்துரைக்கப்பட்டு அதன்படி இந்த நீர் திட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு சிங்களக் கிராமம் சிங்கள விஜய கம்மான என்பதுடன் கிராமத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தேசிய மற்றும் மத ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கி இங்கு வாழ்கின்றனர்.

பொறுப்பான தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படாத குடிநீர் வசதி இல்லாத கிராமங்கள் நாட்டில் இன்னும் பல இருப்பதாகவும், அந்த மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது அரசாங்கத்தின் பொறுப்பு.

ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (Photos) | New Sri Lanka Prevention Of Terrorism Act

பயங்கரவாத தடைச் சட்டம்

சிங்களத் தமிழர் மற்றும் கிராமத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை வழங்கி பாராட்டப்பட வேண்டும். கட்சிகள், நிறங்கள், மதங்கள், சின்னங்கள் என தற்போது உள்ள பிளவுகளால் மக்கள் மத்தியில் பிளவுகள் நிலவும் வரையில் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவது இலகுவான காரியம் இல்லை.

பாதுகாப்பான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கடுமையான சட்ட நிபந்தனைகளைக் கொண்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி பயங்கரவாதத் தடைச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது. 

ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (Photos) | New Sri Lanka Prevention Of Terrorism Act

கடந்த 4 ஆண்டுகளில் ஈஸ்டர் தாக்குதல், தொற்று நோய், நிலைமைகள் மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில், எட்டு மாத குறுகிய காலத்தில், நாடு அனைத்து வழிகளிலும் முன்னேறியுள்ளது. பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்ததை விடவும் உள்ளது.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவே ஒவ்வொருவரும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிக்க வேண்டும்‘‘ என்றார். 

ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (Photos) | New Sri Lanka Prevention Of Terrorism Act

மேலும் நீதி அமைச்சரின் தனிப்பட்ட நன்கொடையுடன் சிஹல விஜயகம பிரதேசத்தில் வசிக்கும் 55 சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கப்பட்டதுடன்,கொண்டச்சி கிராம சேவையாளர் பிரிவில் 24 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் ஜே.ஜே.ரத்னசிறி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல், முசலி பிரதேசச் செயலாளர் உள்ளடங்களாக அரச அதிகாரிகள்,பிரதேச சிங்கள, தமிழ்,முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.  

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US