கடமைகளை பொறுப்பேற்ற நுவரெலியா பிராந்திய புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
நுவரெலியா பொலிஸ் பிராந்தியத்திற்கான புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.பி.ஜே.எஸ்.சந்திரசேகர பண்டார இன்று (02) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
நுவரெலியாவில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை 09 மணியளவில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற நிகழ்வில் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொறுப்பேற்று கொண்டார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் நுவரெலியாவில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதுவரை நுவரெலியா பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய அனுருத்த பண்டார ஹக்மன பதவி உயர்வு பெற்றுச் சென்றமையால் அவருடைய பதவிக்கு ஜி.பி.ஜே.எஸ். சந்திரசேகர பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.











வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
