ஜெர்மனியில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
ஜெர்மனியில் கோவிட் தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜெர்மனிக்கு வரும் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகள் அனைவரும் கோவிட் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கே இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கின்றது. தற்போது சாலை, ரயில் மற்றும் கடல் மூலம் ஜெர்மனிக்கு வரும் பயணிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜெர்மனியில் கடந்த 2 மாதங்களாக கோவிட் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஜூலை மாத துவக்கத்தில் இருந்து மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது.
நேற்றைய தினம் புதிதாக 2,454 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்த நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே, சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam