ஜெர்மனியில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
ஜெர்மனியில் கோவிட் தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜெர்மனிக்கு வரும் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகள் அனைவரும் கோவிட் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கே இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கின்றது. தற்போது சாலை, ரயில் மற்றும் கடல் மூலம் ஜெர்மனிக்கு வரும் பயணிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜெர்மனியில் கடந்த 2 மாதங்களாக கோவிட் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஜூலை மாத துவக்கத்தில் இருந்து மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது.
நேற்றைய தினம் புதிதாக 2,454 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்த நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே, சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021