வடக்கு அத்தியாவசிய உத்தியோகத்தர்களுக்காக ஆளுநர் முன்வைத்த புதிய திட்டம்
வடக்கு மாகாணத்தில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர் கடமைக்கு சென்றுவர மாகாண சபையிலுள்ள பேருந்துகளை பயன்படுத்த ஆளுநர் திட்டமிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச அத்தியாவசிய சேவைகளை வினைதிறனாக மேற்கொள்வதற்கு குறைந்த பேருந்து கட்டணத்தில் குறித்த சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அத்தியாவசிய சேவை
இதேவேளை அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மாகாணத்தில், மாவட்டங்களில் தங்கி நின்று கடமைகளை செய்வதற்கு அவர்களுக்குரிய அரசாங்க விடுதிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அறிவுரை
இது தொடர்பில் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆராய்ந்து தமக்கு
தெரியப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.