பாசத்திற்காக யாத்திரை: ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய வேலைத்திட்டம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் தலைமையில், 'பாசத்திற்காக யாத்திரை' எனும் தொனிப்பொருளில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை எதிர்கட்சிகள் இணைந்து ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவின் ஊடக பேச்சாளர் உமாசந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (18.04.2023) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உமாசந்திர பிரகாஷ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாளையதினம் (19.04.2023) நாட்டின் ஜந்து முக்கியமான இடங்களில் இருந்து இந்த யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளது.
அடிப்படை உரிமை
குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி, மற்றும் கதிர்காமம் ஆகிய இடங்களில் இருந்து யாத்திரை ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான அடிப்படை உரிமையைக் கோருவதே இந்த யாத்திரையின் முக்கியமான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மைக்காலமாக இலங்கையில் மத மற்றும் இன ரீதியிலான உரிமைகள் மீட்படுவதாகவும்
இங்குள்ள மக்கள் இலங்கையர்களாக வாழ்வது மிகவும் சவாலாக உள்ளதாக உமாசந்திர
பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam
