வைத்தியசாலை முறைமை தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கை
ஒருவர் வசிக்கும் பகுதியிலிருந்து இரண்டரை கிலோமீட்டருக்குள் நோய்களைப் பரிசோதிக்க ஆரம்ப சுகாதாரப் பிரிவை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார மேம்பாட்டுக்கான முன்னோடித் திட்டம் இந்த ஆண்டு இரண்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23.01.2024) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதை கூறியுள்ளார்.
வெளிநோயாளர் பிரிவு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“மருத்துவமனை அமைப்பில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வருவது மிகவும் கடுமையான பிரச்சினையாக உள்ளது.

மேலும், ஒருவர் வசிக்கும் பகுதியிலிருந்து இரண்டரை கிலோமீட்டருக்குள் மக்களின் நோய்களைப் பரிசோதிக்க ஒரு ஆரம்ப சுகாதாரப் பிரிவை நிறுவுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
அதற்குத் தேவையான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது ஒரு சவாலாக இருந்தாலும், அது செயல்படுத்தப்படும்.
இதன்படி ஆரம்ப சுகாதார சேவையை நெறிப்படுத்துவதில் சமூக மருத்துவ நிபுணர்கள் மற்றும் குடும்ப மருத்துவ நிபுணர்களை உருவாக்குவது முக்கியம்’’ என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri