டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணி! டிலான் பெரேரா மறைமுகமாக தகவல்
முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளதாக டிலான் பெரேரா மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த பிரேரணையொன்று டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா ஆகியோரின் தலைமையில் நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
தற்போதைக்கு சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டிருந்தனர். அதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆலோசனைகளை சமர்ப்பிக்கவே தாம் அங்கு வருகை தந்ததாக தெரிவித்தார்.
இதன்போது புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் உத்தேசம் உண்டா என்று ஊடகவியலாளர் கேட்டபோது அதற்கு முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நாங்கள் மஞ்சள் நிறத்தை முன்னிறுத்தி புதிய செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். அதனைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று நாங்கள் இங்கு வரும் போதும் மஞ்சள் நிற ஆடை மற்றும் குறியீடுகளுடன் வந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அப்படியென்றால் அது கட்சியின் நிறமா என்று ஊடகவியலாளர் மீண்டும் வினவியபோது அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன் என்று டிலான் பெரேரா பதிலளித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
