வடக்கு ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வைபவத்தை புறக்கணித்த தமிழ் எம்பிக்கள்
வடமாகாண ஆளுநர் சாள்ஸ் நேற்றைய தினம் (22.05.2023) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
குறித்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் செயலகத்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் , தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வினோ எம்பி ஆகிய இருவர் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


