யாழில் தொற்றுநோயாளர்களின் நலனுக்காக புதிய மருத்துவ சிகிச்சை அலகை ஆரம்பிக்க நடவடிக்கை

Jaffna Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Rakesh Dec 12, 2024 11:19 PM GMT
Report

எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோயாளர்களின் நலன் கருதி பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் புதிய மருத்துவ சிகிச்சை அலகை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல் தொற்று நோய் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.

நோயாளர்கள், விடுதிகளின் கட்டில்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் காணப்படுவதால் தரையில் இருந்து சிகிச்சை பெரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை சட்டமாக்கிய குயின்ஸ்லாந்து

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை சட்டமாக்கிய குயின்ஸ்லாந்து

பரவும் நோய்கள் 

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டமையால் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் தாக்கத்துடன் தற்போது புதிதாக எலிக்காய்ச்சல் என மூன்று வகை நோய்களின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்தவகையில் எலிக்காய்ச்சலின் தாக்கத்தால் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழில் தொற்றுநோயாளர்களின் நலனுக்காக புதிய மருத்துவ சிகிச்சை அலகை ஆரம்பிக்க நடவடிக்கை | New Medical Treatment Unit In Jaffna

இதில் பெரும்பாலானவர்கள் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இதன்காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். சிறீபவானந்தராஜா, வைத்தியசாலையின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன் விடுதிகளில் தங்கி இருந்த நோயாளர்களையும் பார்வையிட்டார்.

குறிப்பாக மருத்துவ சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையான நோயாளர்கள் அங்கு மருத்துவ சிகிச்சை விடுதிகளில் கட்டில்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாகக் காணப்படுவதையும், அவர்கள் தரையில் இருந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதனையும் காணக்கூடியதாக இருந்தது.

நாடு திரும்புவதற்காக இராமநாதபுரத்தில் மண்டியிட்டு போராடும் யாழ். இளைஞன்

நாடு திரும்புவதற்காக இராமநாதபுரத்தில் மண்டியிட்டு போராடும் யாழ். இளைஞன்

உடன் நடவடிக்கை 

எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, உடனடியாக வைத்தியசாலையின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி புதிய மருத்துவ சிகிச்சைப் பிரிவு அலகு ஒன்றினை உருவாக்கி அதனுடாக நோயாளர்களுக்குச் சிகிச்சையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.

யாழில் தொற்றுநோயாளர்களின் நலனுக்காக புதிய மருத்துவ சிகிச்சை அலகை ஆரம்பிக்க நடவடிக்கை | New Medical Treatment Unit In Jaffna

அந்தச் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் வை.திவாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜாவுக்கு எடுத்துரைக்கையில் புதிய அலகொன்றை ஆரம்பிப்பதற்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது என்றும், அதனை நிவர்த்தி செய்து தரும் பட்சத்தில் புதிய அலகைத் திறக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலை நிர்வாகத்தினருடன் உடனடியாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டு அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுத்தார்.

குறிப்பாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குத் தேவையான ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை தற்காலிகமாக நிவர்த்தி செய்து தருவதாக அவர் உறுதியளித்ததன் பிரகாரம் புதிய மருத்துவ சிகிச்சை அலகை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

யாழில் தொற்றுநோயாளர்களின் நலனுக்காக புதிய மருத்துவ சிகிச்சை அலகை ஆரம்பிக்க நடவடிக்கை | New Medical Treatment Unit In Jaffna

மேலும், இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் மேலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் வை.திவாகரன் மற்றும் வைத்திய அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உடனடியாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடி எலிக்காய்ச்சலின் நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அத்துடன், தற்போது யாழ்ப்பாணத்தில் பரவி வரும் எலிக்காய்ச்சல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட வைத்திய நிபுணர் குழு ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளது. 

அமெரிக்க தலையீட்டுடன் சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி!

அமெரிக்க தலையீட்டுடன் சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US