இலங்கையில் இயற்றப்படவுள்ள புதிய சட்டம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Sripala De Silva) குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியாது ஆயிரம் ரூபா சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாகப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான வகையில் குறித்த சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தொழில் ஆணையகத்தில் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
சட்டத்தரணிகள் ஊடாக வழக்கு விசாரணைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan