தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தவறாக பரப்புவோருக்கு எதிராக புதிய சட்டம்
சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
காதல் உறவுகளின் போது எடுக்கப்படும் தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை, உறவு முடிந்த பிறகு, சமூக ஊடகங்கள் மூலம் மற்றவர்களைத் துன்புறுத்துவதைத் தடுக்க தொடர்புடைய புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம்
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், முதன்முறையாக இவ்வாறான குற்றத்திற்காக பிடிபடும் நபருக்கு ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை அல்லது 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றத்திற்காக இரண்டாவது முறையாக அல்லது மீண்டும் மீண்டும் பிடிபடும் நபர், அதற்குரிய தண்டனை அல்லது அபராதம் இரட்டிப்பாக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri