சிங்கள பேரினவாதத்தால் மனித புதைகுழியான தமிழர் தாயகம்: தீபச்செல்வன்(Video)
இலங்கை அரசாங்கத்தின் நீதி கட்டமைப்பானது உண்மையிலேயே நீதியுடன் செயல்பட்டு இருந்தால் தமிழர்கள் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது என எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நீதி வழங்கும் நடவடிக்கை அசமந்தப்படுத்தப்பட்டால் வடக்கு - கிழக்கு மண் மீண்டும் கிளர்ந்தெழும், எங்களுடைய தேசம் ஒருபோதும் நீதியைக் காணாது உறங்காது எனவும் இதன்போது சுட்டிக்காட்டி உள்ளார்.
பன்னாட்டு விசாரணை
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுமார் 2000 நாட்கள் கடந்த நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களை உருக்கி - தங்களை இழந்து செய்கின்ற அந்தப் போராட்டமானது இந்த மண்ணில் நீடிக்கத் தான் போகிறது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று எதிர்காலத்தில் இன்னும் பல மனிதப் புதைகுழிகள் தேசத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.
அவை எல்லாவற்றிற்கும் பன்னாட்டு விசாரணையே தீர்வாக இருக்கும். அதற்கான அநீதியும் சர்வதேச ரீதியாக இருக்கும். இதனை இலங்கையில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது எனவும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய விடயங்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
