கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம்
கிளிநொச்சி (Kilinochchi) மேல் நீதிமன்றத்தின் இரண்டாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக எ.ஜி. அலெக்ஸ்ராஜா (A.G. Alexraja) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், இன்றையதினம் (24.04.2024) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய ஏ.எம்.எம். சஹாப்தீன் இன்று முதல் யாழ்ப்பாணம் (Jaffna) குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.
பிரதம நீதியரசரால் நியமனம்
இந்நிலையிலேயே, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாக ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |