பிரித்தானியாவில் பரவும் புதிய வகை நோய் தொற்று: பலியாகும் குழந்தைகள்
பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ பாக்டீரியா தொற்று தற்போது பரவலடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ட்ரெப் ஏ என்பது தொண்டை அழற்சி,டான்சில்லிடிஸ் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் பொதுவான தொற்று ஆகும்.
பாக்டீரியா தொற்று
இந்நிலையில் குறித்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளான நான்கு ஆரம்பப் பாடசாலை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை தொடக்கப் பாடசாலையின் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் குறித்த மாணவர் தொடர்பான விடயங்கள் வெளியிடப்படவில்லை.
பிரித்தானியாவின் சுகாதார சேவை இந்த மரணத்தை உறுதி செய்துள்ளது.
தொற்றினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள்
பாடசாலைக்கு பொது சுகாதார ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்க ஈலிங் கவுன்சிலுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சர்ரேயில் உள்ள ஒரு பாடசாலையில் ஆறு வயது சிறுமி ஒருவர் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்பட்டுள்ளது.
அத்துடன் நான்கு வயது சிறுவன் ஒருவரும் நவம்பர் 14ம் திகதி உயிரிழந்துள்ளார்.
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam