நுவரெலியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய புதிய சுயேட்சைக் குழு
நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புதிய சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
"இனியாவது நமக்காக நாம்" என்ற அமைப்பின் ஊடாக இந்த சுயேட்சைக் குழுவினால் இன்று (08.10.2024) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த சுயேட்சைக் குழுவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்திய ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“நாட்டை வளப்படுத்துவதற்கு பல ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது போல் ஒரு இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் தேர்தல் மூலமாக ஜனாதிபதியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றிணைந்துள்ள இளைஞர்கள்
அதேபோல், மலையகத்தில் அனைத்து பகுதிகளும் வெவ்வேறு மாற்றம் நிகழ வேண்டும் என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
அதற்காகவே, பழைய கட்சிகளை புறக்கணித்து இளைஞர்கள் ஒன்றிணைந்து சுயேட்சையாக களம் இறங்கி உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam