புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது
2021, அக்டோபர் 16 முதல் 31 வரை பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அக்டோபர் 21 வரை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான விலக்குகளுடன் தொடரும், அத்தியாவசியமற்ற பயணங்கள் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்படுள்ளது.
மறு அறிவித்தல் வரை பொதுக் கூட்டங்கள் மற்றும் விருந்துகளுக்கு அனுமதி இல்லை. திருமணங்கள், வெளியில் விழாவாக நடத்தப்படும் போது 75 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
இறந்தவர்களின் உடலத்தை விடுவித்த 24 மணி நேரத்திற்குள் 20 பங்கேற்பாளர்களுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில், முன்பள்ளிகள் 50 சதவீத திறனுடன் அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பிரத்தியேக கல்வி வகுப்புகள் அனுமதிக்கப்படவில்லை.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழகங்கள் செயல்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அக்டோபர் 21இல் இருந்து 25 வீத ரசிகர்களுடன் திறக்கப்படலாம். சமய ஒன்றுக்கூடல்களுக்கு அனுமதி இல்லை

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
