யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபர் இன்று கடமைகளை பொறுப்பேற்கும் சாத்தியம்
யாழ்ப்பாண மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நேற்றைய தினம் (17.01.2023) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார் என தெரியவருகிறது.
அரசாங்க அதிபர் நியமனத்திற்கான அனுமதி
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு,
கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013ஆம்
ஆண்டு தொடக்கம் வட மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம
செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண
விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.


ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
