வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இந்த வசதி விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
சாரதி அனுமதிப் பத்திரங்கள்
இத்திட்டத்தின் கீழ், 14 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும்.
அத்துடன் இலங்கையில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
