சீனா நிர்வகிக்கும் துறைமுகம் குறித்து எச்சரிக்கையாக உள்ள இந்தியா
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பு மறுக்க முடியாதது என்றும், அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான உத்தி, இந்தியாவை குறிவைக்கும் மற்றும் சுற்றி வளைக்கும் தந்திரம் எனவும் இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி அனில் வாத்வா கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், கருத்து தெரிவித்த அவர்,
ஹம்பாந்தோட்டையில் உள்ள துறைமுகம்
“இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் உள்ள துறைமுகம் 2017 ஆம் ஆண்டு முதல் சீனாவால் நடத்தப்படும் வசதியாக இருந்து வருகிறது.

துறைமுக கட்டுமானத்திலிருந்து கடனை திருப்பிச் செலுத்த கொழும்பு போராடியதை அடுத்து, இரு தரப்பினரும் 99 ஆண்டு குத்தகைக்கு கையெழுத்திட்டனர்.
இந்தத் துறைமுகம் இந்தியாவின் கடற்கரைக்கு நேர் எதிரே உள்ள நாட்டில் சீனாவிற்கு ஒரு முக்கிய இடத்தை வழங்குகிறது.
இலங்கைக் கடல் பகுதியில், இராணுவ கண்காணிப்புத் திறன் கொண்டதாகச் சந்தேகிக்கும் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் அடிக்கடி நிறுத்தப்படுவது , புது தில்லியின் அச்சங்களை மேலும் அதிகரித்துள்ளது.
கூடுதலாக, சீனா இப்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் 3.7 பில்லியன் டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சுற்றி வளைக்கும் தந்திரம்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பு மறுக்க முடியாதது.
அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான உத்தி இந்தியாவை குறிவைக்கும் மற்றும் சுற்றி வளைக்கும் தந்திரம் ஆகும்.

சீனப் பொருளாதார மற்றும் இராணுவ வலிமை வளர்ந்து வருவதால், அதன் செல்வாக்கு பாதுகாப்பு மண்டலங்களை தொலைதூரத்தில் உருவாக்கவும், பொருளாதாரக் கடன்கள் என்ற போர்வையில் சார்புகளை உருவாக்கவும், அவற்றை ஒரு தனித்துவமான முறையில் செயல்படுத்தவும் அதன் விருப்பமும் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக தெற்காசியாவின் பல நாடுகளுக்கு சீனா கடன் பொறிகளை உறுவாக்குகின்றன" என்று அவர் தெரிவத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri