சீனா நிர்வகிக்கும் துறைமுகம் குறித்து எச்சரிக்கையாக உள்ள இந்தியா
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பு மறுக்க முடியாதது என்றும், அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான உத்தி, இந்தியாவை குறிவைக்கும் மற்றும் சுற்றி வளைக்கும் தந்திரம் எனவும் இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி அனில் வாத்வா கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், கருத்து தெரிவித்த அவர்,
ஹம்பாந்தோட்டையில் உள்ள துறைமுகம்
“இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் உள்ள துறைமுகம் 2017 ஆம் ஆண்டு முதல் சீனாவால் நடத்தப்படும் வசதியாக இருந்து வருகிறது.
துறைமுக கட்டுமானத்திலிருந்து கடனை திருப்பிச் செலுத்த கொழும்பு போராடியதை அடுத்து, இரு தரப்பினரும் 99 ஆண்டு குத்தகைக்கு கையெழுத்திட்டனர்.
இந்தத் துறைமுகம் இந்தியாவின் கடற்கரைக்கு நேர் எதிரே உள்ள நாட்டில் சீனாவிற்கு ஒரு முக்கிய இடத்தை வழங்குகிறது.
இலங்கைக் கடல் பகுதியில், இராணுவ கண்காணிப்புத் திறன் கொண்டதாகச் சந்தேகிக்கும் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் அடிக்கடி நிறுத்தப்படுவது , புது தில்லியின் அச்சங்களை மேலும் அதிகரித்துள்ளது.
கூடுதலாக, சீனா இப்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் 3.7 பில்லியன் டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சுற்றி வளைக்கும் தந்திரம்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பு மறுக்க முடியாதது.
அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான உத்தி இந்தியாவை குறிவைக்கும் மற்றும் சுற்றி வளைக்கும் தந்திரம் ஆகும்.
சீனப் பொருளாதார மற்றும் இராணுவ வலிமை வளர்ந்து வருவதால், அதன் செல்வாக்கு பாதுகாப்பு மண்டலங்களை தொலைதூரத்தில் உருவாக்கவும், பொருளாதாரக் கடன்கள் என்ற போர்வையில் சார்புகளை உருவாக்கவும், அவற்றை ஒரு தனித்துவமான முறையில் செயல்படுத்தவும் அதன் விருப்பமும் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக தெற்காசியாவின் பல நாடுகளுக்கு சீனா கடன் பொறிகளை உறுவாக்குகின்றன" என்று அவர் தெரிவத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 2 நாட்கள் முன்

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
