பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் ஆதரவு அவசியம்! சர்ச்சைகளுக்கு அநுர பதில்
இலங்கை பிராந்தியத்தின் பாதுகாப்பை நாம் நிறுவ வேண்டும் என்றும், அதற்கு இந்தியா போன்ற நாடுகளின் உதவியைப் பெற வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
காலியில் நேற்று(07.04.2025) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கூட்டு நடவடிக்கை
“ஏற்கனவே நடந்து வரும் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி முறைப்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

இந்தியாவுடனான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
இந்தியாவுடனான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறது.
நாம் முன்னேறுவதற்கு மிகவும் முன்னேறிய நாடுகளின் ஆதரவு அவசியமானது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு
கொழும்பு பாதுகாப்பு மாநாடு மற்றும் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்றவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஒரு சர்ச்சை உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை.
பிராந்திய பாதுகாப்பை நாம் நிறுவ வேண்டும். மேம்பட்ட மற்றும் திறமையானவர்களின் உதவியைப் பெற வேண்டும். இல்லையெனில், நாம் முன்னேற முடியாது," என்று அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri