கடனை செலுத்த முடியாமல் திண்டாடும் அரசு - மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
பழைய கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் புதிய கடன்களை பெற வேண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய வருடாந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
வரி வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும், கடனை செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் அரசாங்கத்தின் பழைய கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக 2455 பில்லியன் ரூபாய் தேவைப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடன் மூலங்கள்
அந்தக் கடன்களைத் தீர்ப்பதற்கு பணம் இல்லாத காரணத்தினால் 2282.3 பில்லியன் ரூபா புதிய கடனாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1787 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனாகவும் 494 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனாகவும் பெறப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் கீழ், மாநில வரி வருவாய் 55.4 சதவீதம் அதிகரித்து 2720 பில்லியன் ரூபாவாக உள்ளது.
மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக பொதுக் கடன் அளவு 114 சதவீதத்திலிருந்து 103 சதவீதமாகக் குறைந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam