வௌவால்களுக்கு பரவும் புதிய கொரோனா வைரஸ்:திரிபடைந்தால் மனிதர்களுக்கு ஆபத்து
சீன ஆராய்ச்சியாளர்கள் குழு, தென் ஆபிரிக்காவில் வௌவால்கள் இடையே பரவி வரும் புதிய கொரோனா வைரஸை கண்டுபிடித்துள்ளனர்.
'NeoCov'என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கொரோனா வைரஸ், மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் 'NeoCov'என்ற இந்த கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறக் கூடும் என அது தொடர்பில் ஆராய்ச்சிகளை செய்த ஹூஹான் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் நோயான Mers உடன் 'NeoCov' நெருங்கிய தொடர்பை காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தென் ஆபிரிக்காவில் வௌவால் கூட்டங்களில் 'NeoCov' கொரோனா வைரஸை காண முடிவதாகவும் அது தற்போது விலங்குகள் இடையில் மாத்திரம் பரவி வருவதாகவும் சீன அறிவியல் நிறுவனம் மற்றும் ஹூஹான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
'NeoCov' கொரோனா வைரஸின் தற்போதைய தன்மைக்கு அமைய அது மனிதர்களுக்கு தொற்றாது. எனினும் திரிபடைந்தால், மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் என்பது தடிமன் முதல் கடும் SARS வரையான நோகளை ஏற்படுத்தக் கூடிய மிகப் பெரிய வைரஸ் குடும்பம். மனிதர்களுக்கு பரவும் நோய்களில் 75 வீதமான நோய் காவிகளாக விலங்குகள் காணப்படுகின்றன.
வௌவால் உட்பட விலங்குகள் மத்தியில் பல கொரோனா வைரஸூகளை காண முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான வைரஸூகளுக்கு எதிராக செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பை வழங்குவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த ஆராய்ச்சி அறிக்கையை அச்சிட்டு வெளியிடும் முன்னர் உலக சுகாதார அமைப்புடன் அதனை பகிர்ந்து கொண்டமை குறித்து அந்த அமைப்பு சீன ஆராச்சியாளர்கள் குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக்கு அமைய கோவிட் 19 நோயுடன் சம்பந்தப்பட்ட கொரோனா வைரசுக்கு நிகரான விதத்தில் 'NeoCov'வைரசுக்கு மனிதர்களின் செல்களுக்கு நுழைய முடியும் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'NeoCov' வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தாக மாற வேண்டுமாயின் அது மற்றுமொரு திரிபாக மட்டுமே மாற வேண்டும். அது தொடர்பில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை இன்னும் மீளாய்வு செய்ய வேண்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.