உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை - செய்திகளின் தொகுப்பு
உலகின் மிகப் பெரிய இரத்தினக்கலின் பெறுமதி தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
சுமார் 510 கிலோகிராம் எடையுடைய இரத்தினக்கல் கொத்தொன்று, இரத்தினபுரி − கஹவத்தை பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கிடைத்திருந்தது.
தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் விதத்தில், இந்தக் கல் பெறுமதி வாய்ந்தது கிடையாது என இரத்தினக்கல் துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கல்லின் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் எனக் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பிலான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,