லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் பதவி விலகியிருந்தார்.
பதவி விலகிய முதித பீரிஸ்
கடந்த 26ஆம் திகதி கடிதம் மூலம் தனது பதவி விலகலை அவர் அறிவித்திருந்தார்.

லிட்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றியிருந்த முதித பீரிஸ் கடந்த 2022 ஜூன் 13ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.
புதிய தலைவர்
இந்தநிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம் அவர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
அதனையடுத்தே குறித்த பதவிக்கு சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்று பதவி விலகும் போது முதித பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam