வீதிப் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்
தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் கூடிய புதிய போக்குவரத்து விதிமீறல் முகாமைத்துவ மென்பொருள் ஒன்று பொலிஸ் சிசிரிவி பிரிவில், நேற்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, இந்த மென்பொருள் நேற்று முதல் சிசிரிவி பிரிவில் செயல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மென்பொருள் பிரைம் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
காணொளி ஆதாரங்கள்
கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், கொழும்பு மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் நிறுவப்பட்ட சிசிரிவி அமைப்புகள் மூலம் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத அறிவிப்புகளை இலங்கை பொலிஸ் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியது.
போக்குவரத்து மீறலுக்கான காணொளி ஆதாரங்களுடன் கூடிய இந்த அபராத அறிவிப்புகள், பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளரின் வீட்டிற்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன.
தற்போது வரை, சிசிரிவி காட்சிகள் மூலம் கைப்பற்றப்பட்ட 12,918 போக்குவரத்து விதி மீறல் சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், குற்றங்களுக்கான காணொளி ஆதாரங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகைகள் குற்றவாளிகள் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கிய அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், முந்தைய மென்பொருள், அதன் சிக்கலான தன்மை காரணமாக இந்தக் கடமைகளைச் செய்யும் அதிகாரிகளுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த சிரமங்களை நிவர்த்தி செய்வதற்கும் செயல்முறையை நெறிப்படுத்துவதற்கும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
