சுதந்திரக் கட்சிக்கு நான்கு அமைச்சு பொறுப்புகள் கிடைக்கும் என தகவல்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நான்கு அமைச்சு பதவிகள் கிடைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் புதிய அமைச்சரவையின் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதுடன் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான பிரதிநிதிகளுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.