புதிதாக நியமனம் பெறவுள்ள 1300 மருத்துவர்கள்
நாட்டில் நிலவி வரும் மருத்துவர்களுக்கான தட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் 1300 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
தற்பொழுது பயிற்சிகளை பூர்த்தி செய்து வரும் இந்த மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் வெளிநாடு செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பின்னணியில் இவ்வாறு மருத்துவர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |