கெஹலியவின் கோரிக்கைக்கு சிறைச்சாலை வழங்கிய சிறப்பு அனுமதி
வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்திருந்த கோரிக்கைக்கு வெலிக்கடை சிறைச்சாலை அனுமதி வழங்கியுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சிபாரிசுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை
சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதன்படி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறைச்சாலை மருத்துவமனை விதிகளின் பிரகாரம் சந்தேக நபராகவோ, குற்றவாளியாகவோ இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தரப்படும் உணவை மாத்திரமே உட்கொள்ள முடியும். வீடுகளில் இருந்து எடுத்து வரப்படும் சமைத்த உணவுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அனுமதியை வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த நிலையில் சிறைச்சாலை திணைக்களம் இந்த அனுமதியை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
