திடீரென மனமாறிய நெதன்யாகு.. லெபனான் குறித்து இஸ்ரேலின் தீர்மானம்
லெபனானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வரும் நிலையில், லெபனான் ஒருபோதும் ஆரம்ப உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானுடன் "முடிந்தவரை விரைவில்" நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தான் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பலவீனமான இருவார கால போர்நிறுத்தம், லெபனானில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால் முறியும் நிலையில் உள்ள சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இணக்கம்..
இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

"இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு லெபனான் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, லெபனானுடன் கூடிய விரைவில் நேரடி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு நேற்று நான் அமைச்சரவைக்கு உத்தரவிட்டேன்."
"இந்த பேச்சுவார்த்தைகள் ஹிஸ்புல்லாவை ஆயுதமேந்துவதை தடுத்தல் மற்றும் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமைதியான உறவுகளை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டிருக்கும்.
பெய்ரூட்டை இராணுவமற்ற மண்டலமாக மாற்ற லெபனான் பிரதமர் இன்று விடுத்த அழைப்பை இஸ்ரேல் பாராட்டுகிறது," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.