டிக் டொக் செயலிக்கு தடை விதித்த மற்றொரு நாடு
நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில் டிக்டொக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு டிக்டொக் செயலி தீங்கு விளைவிப்பதால் தடை செய்யப்படுவதாக நேபாள அரசு கூறியுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், நேபாளத்தில் தனது ஆதிக்கங்களை அதிகரிக்க சீனா தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது.
சைபர் குற்றச்சாட்டு வழக்குகள்
சீனாவிற்கு எதிராக நேபாள அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
நேபாளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் டிக்டொக்கில் 1,629 சைபர் குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நேபாளத்தின் பல மத மற்றும் கலாச்சார இடங்களில் டிக்டொக் காணொளிகளை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பே இந்தியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டொக்கை தடை செய்துள்ளன. தெற்காசியாவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக டிக்டொக்கை தடை செய்யும் மூன்றாவது நாடாக நேபாளம் மாறியுள்ளது.
இந்தியா 2021 ஆம் ஆண்டிலும், ஆப்கானிஸ்தானில் 2022 ஆம் ஆண்டிலும் டிக்டொக்கை தடை செய்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri