சுற்றாடல் துறை மேம்பாடுகளின் உச்சபட்ச நன்மைகளை அடைய பேச்சு வார்த்தை
ஐக்கிய அரபு ராஜ்யம் மற்றும் இலங்கைக்கிடையிலான உறவுகளில், இருதரப்பும் அடைந்துகொள்ளக் கூடிய அனுகூலங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சுற்றாடல் துறையமைச்சர் நஸீர் அஹ்மட்டுக்கும் ஐக்கிய அரபு ராஜ்யத் தூதுவர் காலித் நாசர் சுலைமான் அல் அமரிக்குமிடையில் நடந்த சந்திப்பிலே, இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் சுற்றாடல் துறை அமைச்சில் நேற்று (09) நடைப்பெற்றது.
சுற்றாடல் துறை

இதன்போது, சுற்றாடல் துறையின் மேம்பாடுகளால், அடையக்கூடிய உச்சபட்ச ஆதாயங்களை அடையாளங்காணல் மற்றும் அவற்றை அமுல்படுத்துவதில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயற்படல்.
மேலும் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க முறையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை ஐக்கிய அரபு ராஜ்யம் வழங்குதல் பற்றியே, இச்சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நட்புறவு விஜயம்


நட்புறவு விஜயத்தை, மேற்கொண்டு ஐக்கிய அரபு ராஜ்யத்திலுள்ள தொழில் வாய்ப்புக்களில் இலங்கையரை உள்வாங்குவது பற்றி கவனம் செலுத்துமாறும் ஐக்கிய அரபு ராஜ்யத்தூதுவர் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இலங்கையில் முதலிடுவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்துமாறும் தூதுவரிடம் அமைச்சர் ஹாபிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இச்சந்திப்பில், அமைச்சின் செயலாளர் Dr. அனில் ஜெயசிங்க, முன்னாள் சிரேஷ்ட
இராஜதந்திரி TZ. சம்சுதீன் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam