பூட்டானிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் - விஜித ஹேரத்
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பூட்டான் நாட்டை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பூட்டான் நாட்டின் மொத்தமான கோவிட் தொற்றாளர்கள் ஆயிரத்து 654 பேர், அவர்களில் ஒருவர் மாத்திரமே இறந்துள்ளார்.
மக்களுக்கு தடுப்பூசியை வழங்கியதன் காரணமாகவே அந்நாடு வெற்றிகரமாக தொற்று நோய் பரவலை முறியடித்துள்ளது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவில் குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடாக கருதப்படும் பூட்டானின் மொத்த சனத் தொகை 7 லட்சத்து 79 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.