இண்டிகோவின் வரலாற்றில் மோசமான நெருக்கடி - திடீரென பதவி விலகிய தலைமை அதிகாரி
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி திடீரென பதவி விலகியுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் டிசம்பரில் விமான நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
இண்டிகோவின் மோசமான நெருக்கடி
விமானிகளை சரியாக நிர்வகிக்கத் தவறியதால், டிசம்பரில் நிறுவனம் 4,500 விமானங்களை இரத்து செய்ய வேண்டியிருந்தது, இது இண்டிகோவின் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியாக அமைந்துள்ளது.

இந்த தவறு மற்றும் சரியான மேலாண்மை இல்லாததால், இந்திய விமான அதிகாரிகள் இண்டிகோவிற்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளனர்.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் பதற்ற நிலைமை காரணமாக விமான இரத்து மற்றும் வான்வெளி மூடல்கள் காரணமாக இந்த ஆண்டு இண்டிகோவின் பங்கு விலை 13.5% குறைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.